Friday, 20 December 2013

நட்பு



நீயும் நானும் ஒன்று
உன் காதலால் இரண்டானோம் இன்று
தாயைவிட மேலாய் இருந்தாய் அன்று
பேயைவிட கீழாய் போனாய் இன்று
நட்பு மேலாய் இருந்தது அன்று
காமம் உன் கண்ணை மறைத்தது இன்று
நான் உனக்கு சொன்னது நன்று
அதை நீ புரியும் வேளை என்று?
ஒரு நாள் புரியும் உனக்கு நின்று
நான் உன்னுடன் இருக்கமாட்டேன் அன்று!







உங்கள் மாயாசங்கர்

Thursday, 14 November 2013

முதியோர் இல்லம்




அன்னை நீ
ஆக்கம் நீ
இன்பம் நீ
ஈதல் நீ
உறவு நீ
ஊக்கம் நீ
என்னில் நீ
ஏக்கம் நீ (இல்லாதாருக்கு)
ஐந்தும் நீ (பஞ்சபூதம்)
ஒன்றாய் நீ

இன்றோ ஒளவையார் முதியோர் இல்லத்தில் நீ



உங்கள் மாயாசங்கர்

Tuesday, 17 September 2013

மழை

http://www.hindustantimes.com/Images/2010/4/64d2b36f-e6a8-4fa1-a286-c6d4c326c332HiRes.JPG



எங்கள் தலைவர்கள் போல்
நீயும் வாக்கு தவறிவிட்டாய்,
அவர்கள் தான் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு
அதை நிறைவேற்ற மறந்துவிடுவார்கள்.
அந்த தலைவர்கள் மிஞ்சி நீ
முதலிடம் பெற்றுவிட்டாய்.

Friday, 13 September 2013

தைரியமாய் நட



வாழ்கையில் வழுக்கி விழுந்தாலும் தையிரியமாய் நட,
பாசங்கள் பங்கம் விளைவித்தாலும் தைரியமாய் நட,
நண்பன் துரோகம் செய்தாலும் தைரியமாய் நட,
நாளை நமக்குதான் என்று தைரியமாய் நட,
வெற்றி நமக்குதான் என்று தைரியமாய் நட,
எதிரிகள் வென்றாலும் தைரியமாய் நட,
துன்பங்கள் வந்தாலும் தைரியமாய் நட,
தோல்வி கண்டாலும் தைரியமாய் நட,
அன்பை இழந்தாலும் தைரியமாய் நட,
யாரும் போற்றினாலும் துற்றினாலும் தைரியமாய் நட,
நாளைய உலகம் நமது என்று தைரியமாய் நட.
தைரியத்தை இழந்தாலும் தைரியமாய் நட.

-அன்புடன் மாயாசங்கர்